ராகவனுக்கு இருப்பே கொள்ளவில்லை நர்மதா - அவன் மனைவி - வீடு வந்து சேரவேண்டுமே என்றிருந்தது. மனசு முழுக்கக் கவலை வியாபித்திருந்தது.
ராகவனுக்கு இன்று அலுவலகம் விடுமுறை. அவள் வேலை செய்வதோ தனியார் நிறுவனத்தில் எனவே அவர்கள் வசதிப்படி தான் விடுமுறைகளும் இருக்கும். தினமும் ராகவன் தன் வண்டியில் அவளை ஆபிஸில் இறக்கிவிட்டுப் போவான். ஆனால் அவனுக்கு நேற்று மாலையிலிருந்தே ஜுரம் ஆரம்பித்திருந்தது.
காலையில் புறப்படும்போது கூட அவளிடம் கேட்டான், ’நானே கொண்டுவிடட்டுமா?’ என்று அவள் தான் ’உங்களுக்கு எதுக்கு வீண்அலைச்சல்...இன்னைக்கு ஒருநாள் தானே நானே போய்க்கிறேன்.. நீங்க ரெஸ்ட் எடுத்துக்குங்க.. அதோட மறக்காம டாக்டர்கிட்ட போய்ட்டு வாங்க..ஏதாவது வேணும்னா பக்கத்துவீட்டம்மாகிட்ட கேளுங்க.. எப்படியும் குழந்தைங்க வர்றதுக்கு முன்னாடி வந்திடுவேன்..’ என்று சொல்லிவிட்டுச் சென்றவள் குழந்தைகள் வந்த பின்பும் காணவில்லை. ஆபிஸிற்கு போன் செய்தால் ரிங் போய்க்கொண்டேயிருந்தது. நெட்வொர்க் எல்லாம் ஜாம் என்று சொன்னார்கள். அடுத்த மாதம் முதலில் அவளுக்கு ஒரு ’மொபைல் ஃபோன்’ வாங்க நினைத்தான்.